Thursday 15 May 2008

நம் நாடு

அன்பிற்கு அடித்தளமும் நமது நாடு
ஆன்மீகப் பிறப்பிடமும் நமது நாடு
இன்பத்தின் இருப்பிடமும் நமது நாடு
ஈகைக்குணம் உள்ளவர்கள் இருக்கும் நாடு
உத்தமர்கள் உறைவிடமே நமது நாடு
ஊக்கத்தில் உயர்ந்தவர்கள் உள்ள நாடு
எத்தனையோ சோதனைகள் கடந்த நாடு
ஏராளம் இயற்கை வளம் கொண்ட நாடு
ஐயத்தை போக்கும் நல் அறிஞர் நாடு
ஒற்றுமையால் அன்னியனை எதிர்த்த நாடு
ஓடி ஒதுங்காத நாடு எதிரி கண்டு
ஒளவையென்ற பெண் அறிஞர் வாழ்ந்த நாடு
அஃது எந்த நாடென்றால் நம் பாரதநாடு.

0 comments: