Sunday 22 June 2008

தின்னை…

மேகம் கண்டு ஆடுதடி மயிலு
மோகம் கொண்டு கூவுதிந்த குயிலு
குளிருக்கு இதமா இந்த வெயிலு
கூவிக்கூவி ஓடுதடி ரயிலு

ரெண்டு நாளா காணாமடி உன்னை
ஏங்குதடி எங்கவீட்டு தின்னை
பால்நிலவும் பார்த்துவிட்டு போகும்-உன்னை காணாது
பாற்கடலில் சென்று அது சாகும்

தேடிவரும் தென்றல் உன்னைக்காண
தேன்மொழியாள் நீ என்னைக்கண்டு நாண
பாடிவரும் வன்டினங்கள் மெல்ல
பாவையுன்னை புகழ்ந்து வார்த்தை சொல்ல

வாடிவிடும் மலரினங்கள் எல்லாம்-உன்னை காணாது
வானத்திலும் போர் தொடுக்க வில்லாம்
தேடுதடி என் மனசு உனனை
தேமிதேமி அழுகிறது என் தின்னை

மேகம் கண்டு ஆடுதடி மயிலு
மோகம் கொண்டு கூவுதிந்த குயிலு
குளிருக்கு இதமா இந்த வெயிலு
கூவிக்கூவி ஓடுதடி ரயிலு.

0 comments: