மேகம் கண்டு ஆடுதடி மயிலு
மோகம் கொண்டு கூவுதிந்த குயிலு
குளிருக்கு இதமா இந்த வெயிலு
கூவிக்கூவி ஓடுதடி ரயிலு
ரெண்டு நாளா காணாமடி உன்னை
ஏங்குதடி எங்கவீட்டு தின்னை
பால்நிலவும் பார்த்துவிட்டு போகும்-உன்னை காணாது
பாற்கடலில் சென்று அது சாகும்
தேடிவரும் தென்றல் உன்னைக்காண
தேன்மொழியாள் நீ என்னைக்கண்டு நாண
பாடிவரும் வன்டினங்கள் மெல்ல
பாவையுன்னை புகழ்ந்து வார்த்தை சொல்ல
வாடிவிடும் மலரினங்கள் எல்லாம்-உன்னை காணாது
வானத்திலும் போர் தொடுக்க வில்லாம்
தேடுதடி என் மனசு உனனை
தேமிதேமி அழுகிறது என் தின்னை
மேகம் கண்டு ஆடுதடி மயிலு
மோகம் கொண்டு கூவுதிந்த குயிலு
குளிருக்கு இதமா இந்த வெயிலு
கூவிக்கூவி ஓடுதடி ரயிலு.
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment