Monday 13 April 2009

புத்தாண்டு வாழ்த்து...

அன்பு பொங்கும் ஆண்டாய்
ஆறுகள் இணையும் ஆண்டாய்
இதயம் நிறையும் ஆண்டாய்
ஈகை பெருகும் ஆண்டாய்
உண்மை வளரும் ஆண்டாய்
ஊக்கம் பிறக்கும் ஆண்டாய்
எங்கும் வளர்ச்சியடைய
ஏழை உயர்ச்சியடைய
பொங்கும் மகிழ்ச்சிக்கடலில்
பூவின் அழகைப்போல
எங்கும் மக்கள் வாழ
என்றும் வாழ்த்தும் என் உள்ளம்.

1 comments:

ambzen said...

very nice poem .i am happy. keep it up